4 ஆகஸ்ட், 2010

புத்தளத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

புத்தளம் மாவட்ட செயலகத்தின் கீழ் புதிதாக சிறுவர் பராமரிப்பு நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகம் என்பனவற்றில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் இந்த பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ இதனை திறந்து வைத்தார். இதன் மூலம் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தமது பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக