19 ஜூன், 2010

அகதிகள் படகில் முற்றுகையிடப்பட்டவர்கள் கிரிஸ்மஸ் தீவில் தஞ்சம்



அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து முற்றுகையிடப்பட்ட அகதிகள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் வைத்து குறித்த இரண்டு படகுகளும் 40 நிமிட இடைவெளியில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரண்டு படகுகளிலும் 74 அகதிகள் பயணித்துள்ளதுடன், அவர்கள் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

இந்த வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவிற்கு 3 ஆயிரத்து 278 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக