7 ஜூன், 2010

இந்தியாவின் தாளத்துக்கு ஆடுகிறது இலங்கை : ஜே.வி.பி கூறும் அதிரடித் தகவல்


இந்தியாவின் தாளத்துக்கு நன்றாகவே ஆட்டம்போடுகிறது இலங்கை. நமது நாட்டு அரசியலில் எது,எப்போது நடந்தாலும் அதனை இந்தியா நன்கு அறிந்துவைத்திருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலி முத்திரை குத்தி பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது” என ரில்வின் சில்வா அங்கு மேலும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் நாம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் கோபமான தொனியில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக