7 ஜூன், 2010

மாளிகாகந்த நீதிமன்ற சிறையிலிருந்து 11 பேர் தப்பி ஓட்டம்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த 10 கைதிகளும் ஒரு சந்தேக நபரும் தற்காலிக சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்கள பேச்சாளரும் ஆணையாளருமான கெனித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டிருந்தமையால் இந்தக் கைதிகளும் சந்தேக நபரும் விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். மகசீன் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த வேளையிலேயே இவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர் எனச் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக