16 ஏப்ரல், 2010

7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் கருமபீடம்






எதிர்வரும் 22ம் திகதி கூட வுள்ள 7வது பாராளுமன்ற த்தின் முதலாவது அமர்வுக் கான ஏற்பாடுகள் நிறை வடைந்துள்ளதாகவும் இன்று (16) முதல் 18 ஆம் திகதி வரை எம்.பிக்களின் தகவ ல்களை திரட்டுவதற்கான விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பாராளுமன்ற செய லாளர் நாயகம் தம்மிக தச நாயக்க நேற்று தெரிவித்தார்.

இம்முறை கூடுதலான புதுமுகங்கள் பாராளுமன்ற த்துக்கு தெரிவாகியுள்ளதால் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து தகவல் கருமபீடத் தினூடாக அறிவூட்டப்படவு ள்ளதோடு அவர்களது தகவல் களும் திரட்டப்படவுள்ளன.

பாராளுமன்றத்தின் முத லாவது அமர்வையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டு வரு வதோடு ஏனைய ஒழுங்கு களும் துரிதமாக இடம் பெற்று வருவதாக தம்மிக தசநாயக்க மேலும் கூறினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொட ர்பாக பாராளுமன்ற செயலா ளர் தலைமையில் நேற்று (15) விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.

7 ஆவது பாராளுமன் றத்தின் முதலாவது அமர்வு 22ம் திகதி காலை 8.45 மணிக்கு இடம்பெறவுள்ளது. முதலாவது நிகழ்வாக சபா நாயகர் தெரிவு இடம் பெறும். அடுத்து சகல எம்.பி. க்களினதும் பதவி ஏற்பும் அதன் பின்னர் பிரதி சபா நாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகளும் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து 7 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என்றும் அவர் மேலும் கூறி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக