16 ஏப்ரல், 2010

புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய டீசல் களஞ்சியம் கண்டுபிடிப்பு; 25,000 லீட்டர் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய டீசல் களஞ்சியம் ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்தக் களஞ்சிய தொகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்தும் இடையிலான லீற்றர் டீசல்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற் கொண்டுள்ளனர். இதன் போதே பெருந் தொகையான டீசலை கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, 12.7 மி.மீ. ரக 2250 ரவைகள் மற்றும் மோட்டார் குண்டுகளையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். டீசல் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் இராணு வமும், பொலிஸாரும் தொடர்ந்து பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக