10 ஜனவரி, 2010

மகேஸ்வரன் ஞாபகார்த்த மண்டபம் நல்லூரில் திறப்பு

கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நினைவாக ஞாபகார்த்த மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த மண்டபத்தினை திறந்துவைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரியஇ அமரர் மகேஸ்வரனின் மனைவிஇ பிள்ளைகள் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக