10 ஜனவரி, 2010

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 36ம் ஆண்டு நினைவுதினம்

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று 09 ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 36ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 36வது நினைவு தினமாகிய இன்று இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.

யாழ் முற்றவெளியிலுள்ள நினைவுத்தூபியில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் இத்தினைத்தை நினைவுகூர வேண்டிய நிலையிருந்தது. யாழ். துரையப்பா அரங்கில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடந்து கொண்டிருந்ததன் காரணமாக அப்பகுதிகள் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தபடியால் மிகவும் அமைதியான முறையில் புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களால் 36வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக