8 ஜனவரி, 2010

மட்டு., யாழ்., அநுராதபுரம், திருமலை சிறைச்சாலை தமிழ் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்


கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அல்லது பிணையில் விடுதலை அல்லது பொது மன்னிப்பு ஆகிய கோரிக்கைகளை அரசாங்க்திடம் முன் வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 5 அரசியல் கைதிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்த விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர தங்களது விடுதலை தொடர்பாக எவ்வித சாதகமான நிலைப்பாடும் இது வரை எட்டப்படவில்லை என குறிப்பிட்ட கைதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

திருகோணலை சிறைச்சாலையில் 56 கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள அதே வேளை யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் அனுஸ்டித்த அரசியல் கைதிகள் 25 பேரில் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக