4 ஜனவரி, 2010

ஆயுத ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா தயார்- விஜயத ஹேரத்

ஆயுத ஊழல் பற்றிய விவாதம்; சவாலை ஏற்றது ஜெனரல் தரப்பு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசுத் தரப்பினர் முன்வைத்திருக்கும் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா எப்போதும் தயாராகவுள்ளார் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி இதனைத் தெரிவித்தார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்சேகாவின் பேச்சாளருமான விஜித ஹேரத்.
அவர் அங்கு கூறியவை வருமாறு: அரசு முடிந்தால் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக சரத் பொன்சேகாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்று பார்க்கட்டும். மேலும் இந்த விடயம் தொடர்பாக எந்த நேரத்திலும் விவாதிக்க அவர் தயாராக உள்ளார். விமல் வீரவன்ஸ எம்.பி. தெரிவித்துள்ள ஆயுத ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதிக்கவும் நாம் தயார். என்றார் அவர்.