12 ஜனவரி, 2010

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் தொடர்பகங்களை அமைக்குமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் புளொட் இயக்கத்திடம் வேண்டுகோள்

வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மக்கள் பணிகளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மவாட்டங்களுக்கு விஸ்தரிக்குமாறு அவ் பகுதி மக்கள் தலைவர் சித்தார்த்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அவ்மக்களின் நிவர்த்தி செய்யப்படாமல் இன்னும் தேவையாகவுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டும் குறைநிறைகளை கேட்டறிந்துவரும் புளொட் அமைப்பின் தலைமையிடம் இந்த வேண்டுகோளை அப்பகுதி மக்கள் நேரடியாகவே விடுத்துள்ளனர்.
அவ் மக்களின் வேண்டுதலிற்கு அமைய, அவர்களுடன் பக்கதுணையாக அருந்கே இருந்து மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று புளொட் தலைமைப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ள மக்களிற்கு தெரிவித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் குறித்து உயர்பீடம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக