12 ஜனவரி, 2010

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும் 26ம் திகதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான
தபால் மூல வாக்களிப்பு நாடெங்கும் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் விண்ணப்பித்து ள்ளனர். அனைத்து மாவட்டங்களிலு முள்ள சுமார் 15 ஆயிரம் அரச அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி தபால் திணைக்களத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.