12 ஜனவரி, 2010

மஹிந்தவும் சரத்தும் வெளிநாட்டு முகவர்கள் - ரத்மலானை கூட்டத்தில் விக்ரமபாகு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சோகாவும் மேலை நாடுகளின் முகவர்கள். அவர்களை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என கலாநிதி விக்ரமாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் விக்ரமபாகு கருணாரத்ன ரத்மலானை - கம்கரு செவன நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஏராளமான தமிழ் மக்களைக் கொன்றொழித்த இவர்கள் இருவரும் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக