20 ஜனவரி, 2010

துப்பாக்கிப் பிரயோகத்தில் மு.கா. ஆதரவாளர் காயம் :அக்கரைப்பற்றில் சம்பவம்

No Image
அக்கரை ப்பற்று பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான முகம்மது சூர்த்தீன் றிபாஸ் (19 வயது) என்பவரே காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இடது கால் தொடைப் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரது அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இளைஞரே வீட்டில் முன் வீதியில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்ததுடன் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு கைக்குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைக்குண்டு தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆதம் லெப்பை உபைத் என்ற தேசிய காங்கிரஸ் ஆதரவாளர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு போகும் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போதே துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



காங்கிரஸின் வெற்றிக்கு இலங்கை தெரிவித்த காரணம் நிராகரிப்பு


No Image

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதங்கள் பிரயோகிப்பதை நிறுத்துவதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம்இ இந்திய அரசாங்கம் கடந்த வருட தேர்தலின் போது தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவியது என்று உயர் மட்ட இலங்கை அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது .

இந்திய தேர்தல் முடிவுகளில் இலங்கை விவகாரத்திலும் பார்க்க உள்ளுர் அரசியல்இ பொருளாதார காரணிகளே ஆதிக்கம் செலுத்தின என்று காங்கிரஸ் பேச்சாளர் ஸ்ரீ சத்யவ்றாத் சதுர்தேவி தெரிவித்துள்ளார். தேர்தலின் போது கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழகம்இ செல்வி ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் ஆகிய இரண்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரம் இரண்டு கட்சிகளினாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது காரணியாகும். தேர்தலில் இது எந்தவொரு கட்சிக்கும் அனுகூலத்தை இது ஏற்படுத்தவில்லை என்று சதுர்தேவி தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்திதின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுத பாவனையை நிறுத்தவதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதன் மூலம் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி கடந்த வருட தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெற உதவினார் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு முயற்சி : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு


No Image


எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும்இ பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இதுவரை எமது இரண்டு ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். அமைதியான தேர்தலை ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்புக்கு அறிவித்துள்ளோம். அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும். ஒருகாலத்தில் வன்முறையில் ஈடுபட்ட மற்றும் அடையாள அட்டைகளை பறித்த கட்சி இன்று எதிரணியில் இருக்கின்றமையும் குறிப்பிடவேண்டும்.

வறியவர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்கள் இன்று டை கோர்ட் உடைக்கு மாறியுள்ளனர். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் முன்வைத்த தர்க்கமாகும். ஆனால் எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுமே தவிர முழுமையாக நீக்கப்படமாட்டாது என்று எதிரணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் தற்போது மக்கள் விடுதலை முன்னணி என்ன கூறவிரும்புகின்றது? கட்சியின் நிலைப்பாடு என்ன? ஜனாதிபதியினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது என்று ஆரம்பத்திலிருந்து நாங்கள் கூறிவந்தோம். இதுவே யதார்த்தம். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று எதிரணியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். அதனை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் செய்ய முடியும். ஏனைய விடயங்களை பாராளுமன்றத்திலேயே செய்ய முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனையிலும் இந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். சமாதான பேச்சுக்களிலும் ஈடுபட்டோம். ஆனால் அவை தோல்வியடைந்தன. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தனது பணியில் ஈடுபட்டுவருகின்றது. அதற்கிடையில் தற்போது தேர்தல் வந்துள்ளது.

நாங்கள் இம்முறை மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்திலும் சில யோசனைகளை முன்வைத்துள்ளோம். அதாவது செனட் சபை மக்கள் சபைகள் உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் தற்போது கூற முடியாது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளமை போன்று தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். கடந்த காலங்களில் தொழில் அமைச்சு தலையிட்டு இவ்வாறு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தது. நிதி ஊழல் மற்றும் ஏனைய மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவைவிட இலஞ் ஊழல் தடுப்பு திணைக்களம் சிறந்தது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். காரணம் முன்னர் அதில் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டோம்


தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும்
நாம் சாதிக்கலாம் :சம்பந்தன்
No Image

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையக் கூடியததொரு தருணத்தை ஜனாதிபதித் தேர்தல் எமக்குத் தந்திருக்கின்றது. எதிர் காலங்களிலும் இந்த இணைப்பினைப் பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம். பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களோடு நடந்துகொள்ள நாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும்இ இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ எம்.பி.க்களான மாவை சேனாதிராஜாஇ செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபைஇ மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். கல்முனை மாநகர சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் தலைமகன் விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். எங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இவ் ஒன்றிணைவின் மூலம் தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டிக் காத்துஇ நாமே நம்மை ஆள வேண்டிய நிலையினை உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ எம்மை ஆள நாம் இடமளிக்க கூடாது. பஞ்சாப்இ ஆந்திராஇ தமிழ்நாடு எனத் தனித்தனியான மாநில ஆட்சிகள் நடைபெற்றாலும் இந்தியாவின் முழு ஆட்சியினையும் அது பாதிக்கவில்லை. அது சிதறவும் இல்லை. மாறாக முன்னேற்றமே அடையும். இவ்வாறானதொரு ஆளுமையினையே இங்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உண்மைக்கு உண்மையாக நேசிக்க வேண்டும். இதன் மூலமே நிரந்தர உறவினைப் பேண முடியும். சிங்கள மக்களை நாம் மதிக்கின்றோம். ஆனால்இ அவர்களுக்கொரு மண்இ பண்பாடுஇ மொழி இருப்பது போல் தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜனாதிபதி மஹிந்தவைப் பொறுத்தவரை அவருக்கு அடிபணியக் கூடியஇ அவர் சொல்வதற்கு ஆமாம் போடுகினற தலைவர்களையே அவருக்குப் பிடிக்கும். இதற்கு மாற்றமான தலைவர்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.

எமது மக்களின் பிரச்சினை எதுவென்பதை அறிந்து அதனை பேசித் தீர்க்கக் கூடியவர்களே அரசியலில் இறக்க வேண்டும். இது பற்றித் தெரியாதவர்கள் இதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. மனிதாபிமானமில்லாத தலைவராகவே ஜனாதிபதியை நாம் காண்கின்றோம். பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாமல் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடத்தி அவர்களின் குடும்பங்களைப் பயமுறுத்தும் காரியத்தை இவ் அரசு செய்தது. இதுவெல்லாம் ஜனநாயகமா? என நாம் கேட்கின்றோம்.

எடுத்த எடுப்பில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அலசிஇ பேசி ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். வட மாகாண முஸ்லிம்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். தங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டும். காணிஇ கல்விஇ தொழில் இவைகளைப் பற்றியெல்லாம் ஜனாதிபதியிடம் பேசினோம். ஆனால் அவர் இவைகளையெல்லாம் இழுத்தடிப்புச் செய்தார். பொன்சேகாவுடன் பேசியபோது சாதகமான சமிக்கை கிடைத்தது. அதன் பின்னரே எமது முடிவை அறிவித்தோம்.

நான் தான் யுத்தத்தை வென்றவன் என மார்பு தட்டிக்கொண்டு இருந்த ஜனாதிபதிக்கு அவருக்குள்ளிருந்தே பொது வேட்பாளரை எதிரணியினர் தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகவும் சாதாரணமாக நினைத்த ஜனாதிபதித் தேர்தல் இன்று ஜனாதிபதிக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பின்னும் எமது உரிமைகள் வெல்லப்படவில்லையாயின் 2010ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் இணைந்து அதனைப் பெற முயற்சிக்க வேண்டும். இவைகளினூடாகவே தமிழ் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்றார்



சரத் பொன்சேகாவின் வெற்றி பிரிவினைக்கான அங்கீகாரம் :எஸ்.பி திஸாநாயக்க



No Image

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைக்குனிவை சந்தித்துள்ள சர்வதேச நாடுகள்இ சரத் பொன்சேகாவைப் பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்குள் பிரிவினை வாதத்திற்கு வித்திடுகின்றன என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டவருமான எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்கப் போவதில்லையென்றும் அவர் கூறினார். கொழும்பு ஜானகி ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு இவர் மேலும் கூறியதாவதுஇ

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றாகப் பிரிந்துள்ளது. 4 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றனர். 4 பேர் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். ஒருவர் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். 7 பேர் பொன்சேகாவை ஆதரிக்கின்னர். எனவே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்காது. பொன்சேகாவின் வெற்றியென்பது விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்பின் இரகசிய ஒப்பந்தத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலி உறுப்பினர்களினதும் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைகுனிவை எதிர்நோக்கிய சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்புடனேயே இந்த நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்ற சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இராணுவத்தினர் சிறு பிழையைச் செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கும் மனப்போக்குடையவர். இவ்வாறான நபரொருவர் நாட்டின் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 27ஆம் திகதி பதவியேற்றால் படை உயர் அதிகாரிகளின் சீருடைகளை கழற்றுவேன் என்கிறார். இப்போதே பழி தீர்க்கும் தனது குணாம்சத்தை வெளிக்காட்டுகிறார்.

இவர் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கப் போகிறார்? 17 ஆவது திருத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார். காபந்து அரசாங்கத்தில் பிரதமர் சரத் என் சில்வா என ஜே. வி. பி. தெரிவிக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தானே பிரதமர் என்கிறார். இவ்வாறு இப்போதே குழப்பங்கள்இ முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தையும் செய்து கொண்டு மறுபுறம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தார். வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு கண்டார். அதிவேகப் பாதைகள்இ மேம்பாலங்கள் என அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று யுத்தம் முடிந்து விட்டது. இவ்வாறானதொரு நிலைமையில் மேற்கண்ட அபிவிருத்திகளை மேலும் துரிதகதியில் முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஊழல்இ மோசடிகளற்ற நல்லாட்சியை உருவாக்க பொன்சேகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வக்காளத்து வாங்குவோர் இன்று என்ன செய்கின்றனர்? 300 இலட்சம் கொடுத்து முஸ்ஸம்மில் எம்.பி.யை வாங்க முயற்சித்துள்ளனர்.

இவ்வளவு தொகை பணம் எங்கிருந்து கிடைத்தது? அது சர்வதேச ரீதியில் உள்ள புலிகளிடமிருந்து கிடைத்தது. ""அரச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி" என்கிறார்கள். ஜனாதிபதி எளிமையான மக்களோடு மக்களாக வாழ்பவர். அவரது புதல்வர்கள் வெளிநாடு சென்றாலும் படையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை. ஆனால் பொன்சேகாவின் மகள் திருமணம் செய்து அமெரிக்கா சென்றார். அதன் போது படையினர் பாதுகாப்பிற்குச் சென்றனர்.

பொன்சேகா தளபதியாகவிருந்த போது 16 பெண் அதிகாரிகள் இருந்தனர். இவ்வளவு தொகை ஏன் என்பது எனக்குத் தெரியாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று எனது பழைய உரையொன்றை பயன்படுத்தி பொன்சேகாவுக்கு ஆதரவாக விளம்பரமொன்றை ஒளிபரப்புகின்றது. இதனை நிறுத்த வேண்டுமென எனது சட்டத்தரணியூடாக அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக