29 நவம்பர், 2009

தற்காலிக அடையாள அட்டை விநியோக பணிகளில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை இணைத்துக்கொள்ள ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.விண்ணப்பித்தவர்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களினூடாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சேவைக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள 67 வயதிற்கு குறைந்த, அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பெயர், பிறந்த திகதி, வயது, ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடமை புரிந்த நிறுவனம், இறுதியாக கடமை புரிந்து நிறுவனம், ஓய்வூதிய கொடுப்பனவு, நிரந்தர முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிவற்றை உள்ளடக்கிய விண்ணப்பமொன்றை அனுப்பி வைக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவு திணைக்களம்,
C-45 கெப்பட்டிபொல வீதி,
கொழும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக