8 அக்டோபர், 2009

கொஸ்கொட வாகன விபத்தில் மூவர் பலி; 11 பேர் காயம்

வவு. பூந்தோட்டத்தில் சந்தேக நபர் ஒருவர் சுட்டுக் கொலை





- இன்று அதிகாலை 12.25 மணியளவில், கொஸ்கொடவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர்: 11 பேர் காயமடைந்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இன்டர்சிட்டி பஸ்ஸ{டன் களுத்துறையிலிருந்த வந்த இ.போ.ச பஸ் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

விபத்தில், இன்டர்சிட்டி பஸ் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்


வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சீநகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மூவரை கைது செய்ய மேற்கொண்ட முயற்சியின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சந்தேகத்திற்கிடமான மூவர் அப்பகுதியில் நடமாடியபோது, அவர்கள் குறித்து அறிய பிரதேச மக்கள் முயற்சித்தனர்.

அப்போது அவர்களில் இருவர் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டைக் காட்டி மக்களை அச்சுறுத்தியுள்ளனர் எனவும், பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் பொலிஸார் இருந்த திசையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இரண்டாமவர் தம்மிடம் இருந்த கைக்குண்டை மற்றைய சந்தேக நபரை நோக்கி வீசிய போதிலும் அது வெடிக்கவில்லை எனவும், அந்தக் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபரும் தப்பிச் செல்ல முயன்ற போது, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக