12 டிசம்பர், 2009

கல்பிட்டி-மன்னார் நேரடி பஸ் சேவை நேற்று ஆரம்பம்




கல்பிட்டியிலிருந்து மன்னாருக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை நேற்று (2009.12.10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த பஸ் சேவையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

கல்பிட்டியிலிருந்து புத்தளம் வந்து, அங்கிருந்து மதவாச்சி வரை செல்லும் வவுனியா-மன்னார் பஸ்களில் சென்று, மதவாச்சியில் கடும் சோதனைகளுக்குப் பின்னர் மற்றுமொரு பஸ்ஸில் ஏறி பயணிக்க வேண்டிய நிலையே இருந்து வந்தது.

தற்போது மதவாச்சி சோதனை சாவடி பயணிகள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டதையடுத்து இந்த பஸ் சேவை இன்று ஆரம்பமானது.

தினந்தோறும் காலை 7.00 மணிக்கு கல்பிட்டியிலிருந்து மன்னாருக்கும், மன்னாரிலிருந்து காலை 9.00 மணிக்கு கல்பிட்டிக்குமான போக்குவரத்து இடம்பெறும் என மன்னார் பஸ் சாலை பணிப்பாளர் எம்.அஸ்ஹர் தெரிவித்தார். இன்னும் சில தினங்களில் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக