1 டிசம்பர், 2009

கிழக்குக் கடலில் தத்தளித்த 12 மியன்மார் மீனவர்கள் மீட்பு


கிழக்கு கடலில் தத்தளித்த 12 பேரைக் கொண்ட மியன்மார் மீனவர் குழுவொன்று இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலைக்கு அண்மித்த பகுதியில் இவர்களின் மீன்பிடிக்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது. அவ்வேளை, குறித்த மீனவர்களினால் அபாயக் குரல் எழுப்பப்பட்டதாகவும்,இதனையடுத்து அங்கு விரைந்த மீனவர்கள் நேற்று மாலை 12 மியன்மார் மீனவர்களையும் காப்பாற்றி மீட்டு வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி மீனவர்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் எதுவும் இல்லாத போதிலும் மீன்பிடிக்கலத்திலிருந்த ஆவணங்கள் மூலம் இம்மீனவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக