17 டிசம்பர், 2009

சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஜனவரி முதல் 10 இலட்சம் ரூபா

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்படுமென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார். கிராமத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென அமைச்சர் கூறினார்.

கலகெதரை வேத்தாவ கனிஷ்ட பாட சாலைக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். எமது கட்சியின் கொள்கை அனைத்து கிராமங்களுக்கும் நிதி வழங்கு வதாகும் ஆனால் மற்றைய கட்சிகளின் கொள்கை கொழும்புக்கு நிதியை கொண்டு வருவதாகும். இதுவரை இருந்த அரசாங்கங்கள் மேல் மாகாணத்துக்கே நிதியை செலவிட்டன. அதேபோல் நாட்டின் 52 சதவீத நிதி மேல் மாகாணத்திலேயே உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் மூலம் மட்டுமே முதல் முறையாக இவ்வாறு கிராமங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கிராமங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக