10 நவம்பர், 2009

இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் திட்டமில்லை : ஐரோப்பிய ஒன்றியம்



இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கும் திட்டமெதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகளில் உண்மையில்லை.

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. குறித்த சலுகைத் திட்டம் மறுக்கப்பட்ட போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு தடைகள் விதிக்கப்பபட மாட்டாது.

பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டுமாயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விரும்புகின்றது.

சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வ பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக