18 நவம்பர், 2009

வெற்றிக்கு அரசியல் தலைமை காரணம்: இலங்கை ஜெகத் ஜெயசூர்யா கருத்து

Top global news update


கொழும்பு:"அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்தது'என, இலங்கை ராணுவ தளபதி ஜெகத்ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார்காரணம் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல்தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், ராணுவத்துக்கு இந்த மிகப் பெரியவெற்றி கிடைத்தது என, கூறுவேன்.


ராணுவத்தில் இருந்து கொண்டே, அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ராணுவத்தினர், தற்போதுள்ள நிர்வாகத்துக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும். ராணுவ வீரர்களின் சம்பள உயர்வு குறித்து அரசுபரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு ஜெகத் ஜெயசூர்யாகூறினார்.புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதில், அதிபர் ராஜபக்ஷேவுக்கும், முன்னாள் ராணுவத் தளதிபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை தான், மறைமுகமாக தனது பேச்சில் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக