18 நவம்பர், 2009

யங்கரவாத தடுப்பு, அவசரகால சட்டம்: 630 கைதிகளில் 46 பேர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டம் என்ப வற்றின் கீழ் கைதான 630 கைதிகள் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் படி 46 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

ஏனைய கைதிகள் தொடர்பில் நீதி மறுசீரமைப்பு அமை ச்சரினூடாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளோம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர். த சில்வா தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலா ளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த சனிக்கிழமை மெகசின் சிறையிலுள்ள கைதிகள் சிலர் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். அவர்களை சந்தித்து அவர்க ளது பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தினர்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் விடுதலை செய்யுமா றும் கோரினர். ஆனால் நீதிமன்றம் செய்யக்கூடிய விடயங்களை செய்ய என க்கு அதிகாரம் கிடையாது என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக