6 அக்டோபர், 2009


ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் தொடர்புகளைபேணும்


ஆசிரிய பணி என்பது சேவையை அடிப்படையாகக் கொண்டது : ஜீஆரஎஸ்இணைப்பாளர்





.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் சர்ச்சைகள் உள்ள நிலையிலும் இலங்கையுடனான உறவுகள் தொடருமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

சீ.ஐ.எம்.ஏ. வர்த்தகக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் உறவுகளைப் பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஊதியம் பெறுகின்ற பணியானாலும்சேவையைஅடிப்படையாகக்கொண்டது. இதன் காரணமாகவே ஆசிரியர்கள் மதிக்கப்படுகின்றார்கள்; இன்று கெளரவிக்கப்படுகி்ன்றார்கள்" என ஜேஆர்எஸ் எனப்படும் இயேசுவின்அகதிகள் சபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் அருட்சகோதரி
க்சுமி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜேஆர்எஸ் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின வைபவத்தில்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜேஆர்எஸ் நிறுவனத்தின் முன்பள்ளி மற்றும் மாலைநேர பாடசாலைஆசிரியைகளுக்கான வதிவிடப் பயிற்சி நெறியின் முடிவில் இடம்பெற்ற ஆசிரியதின வைபவத்தில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்உரையாற்றினார்.

"தாயின் அரவணைப்புக்கு அடுத்ததாக குழந்தைகள் முன்பள்ளிஆசிரியைகளிடமே வருகின்றன. அவ்வாறு வருகின்ற குழந்தைகள் தாயின்அரவணைப்பையும் கல்விக்கான வழிகாட்டல்களையும் முன்பள்ளிஆசிரியைகளிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

எனவே முன்பள்ளிக்கு வருகின்ற பல குழந்தைகளுக்கும் ஒரு தாயின் நிலையில்இருந்து சகிப்புத் தன்மையோடு, அன்பின் வடிவாக இருந்து வழிகாட்டவேண்டியது முன்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

ஜேஆர்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள், தமது ஆசிரியபணியுடன் நின்றுவிடாமல், இடம்பெயர்ந்தோருக்காக எமது நிறுவனம்மேற்கொண்ட பல்வேறு பணிகளிலும், சேவைகளிலும் சோர்வின்றிஉற்சாகத்தோடு முன்னின்று உழைத்து வருகின்றார்கள்.

பொறுப்புமிக்க ஆசிரிய பணியைச் செய்வதற்கு முன்வந்துள்ள ஆசிரியைகள்பாராட்டப்பட வேண்டியவர்கள்; வாழ்த்தப்பட வேண்டியவர்கள். எனவேஅவர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்"

இந்த வைபவத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த முன்பள்ளிஆசிரியைகள் கலந்து கொண்டார்கள். ஆசிரியைகளின் கலைநிகழ்ச்சிகள், ஜேஆர்எஸ் நிறுவனத்தின் வலயங்களுக்கான பொறுப்பாளர்களின்ஆசியுரைகளும் இந்த வைபவத்தில் இடம்பெற்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக