6 அக்டோபர், 2009

ஆஸியில் சட்டவிரோத பிரவேசம் : விழிப்புணர்வூட்ட கிராமந்தோறும் வீதி நாடகங்கள்


இந்தியா கேபியை விசாரிக்க இலங்கை அரசு மறுப்பு : இந்தியச் செய்திகள் தகவல்









முறையில் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இணையத் தளச் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வெறு கிராமங்களிலும் இந்த வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளதாகவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் இதற்கு அனுசரணை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விளம்பர நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த வீதி நாடகப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதனை இந்த வீதி நாடகங்கள் எடுத்தியம்ப உள்ளன.

உள்நாட்டு கலைஞர்களே இந்த வீதி நாடகங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்




விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் - செல்வராஜா பத்மநாதன் என்கிற கேபியை இந்தியா விசாரிக்க இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

"கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி கைது கேபி செய்யப்பட்டார். அவரிடம் இலங்கை அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைகள் முடிவடைந்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அவரை விசாரிக்க அனுமதிப்பதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கேபிதான் நிதி உதவி வழங்கினார், ஆயுதங்களை வாங்கி அளித்தார் என்று இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக கேபியிடம் விசாரணை நடத்தினால் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்றும் அது நம்புகிறது.

கேபியை விசாரிக்க ஏற்கனவே இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது இந்தியா. கேபியை விசாரிக்க சிபிஐ குழுவும் கூட தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் கேபியை இப்போதைக்கு யாரிடமும் காட்டுவதற்கோ அவரை விசாரிக்கவோ அனுமதிப்பதாக இல்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசு கொண்டிருப்பதாகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக