2 அக்டோபர், 2009

புலிகளின் முக்கிய உறுப்பினர் நலன்புரி நிலையத்திலிருந்து கைது-

புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் மக்களுடன் மக்களாக தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை புகையிரதபாலம், பொல்காவல பஸ்மீதான குண்டுதாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட நபரே விசேட பொலிஸ் பிரிவினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை .புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் மோட்டார் படகு மற்றும் வெடிமருந்துகளுடன் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்த படகுமூலம் வடக்கே யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலத்தில் பெற்றோல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்; தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக