3 செப்டம்பர், 2009

கால்வாய் ஒன்றில் கவனிப்பாரற்ற பொதி

இருவர் காயம்; அச்சுவேலியில் சம்பவம்

கால்வாய் ஒன்றில் கவனிப்பாரற்ற நிலையில் கிடந்த பொதியை எடுத்து விளையாட முற்பட்ட போது அந்த பொதி வெடித்ததில் சிறுவன் கொல்லப்பட்டுள்ள துடன் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511 வது படைப்பிரிவின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கர தெரிவித்தார்.

இந்தச்சம்பவத்தில் 11 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளது டன், ஒன்பது மற்றும் ஏழுவயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

அச்சுவேலி பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 511வது படைப் பிரிவினரின் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள்

விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறு வர்கள் குழுவொன்று அங்குள்ள கால்வாயில் கவனிப் பாரற்ற நிலையில் காணப்பட்ட பொதி ஒன்றை கையில் எடுத்து விளையாட முற்பட்டுள்ளனர். இதன் போது அந்த பொதியில் இருந்த கைக்குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

பொதியை கையில் வைத்திருந்த சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த இரு சிறுவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா கவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக