18 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு : மத்திய அரசு தலையிடக் கோரி திமுக வலியுறுத்து


இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக சார்பில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமரை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அப்போது இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் உறுதியளித்ததாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக