26 ஜூன், 2011

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபை கலந்தாலோசித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக