16 நவம்பர், 2011

கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு நேற்று 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் பல்கலைக்கழக வளவுக்குள் உட்பிரவேசிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் பிரேம குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு பல்கலைக்கழக கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இரு பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதியை நிலை நாட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக