23 ஜூன், 2011

தனியார் துறைக்கு நிகரானதாக இ. போ. சபை தரமுயர்த்தப்படும்


இலங்கை போக்குவரத்து சபை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை விட, தரமான சேவையை வழங்கும் நிறுவனமாகவும் தனியார் போக்குவரத்துடன் போட்டியிடக்கூடிய வகையில் எதிர்காலத்தில் புதிய நடைமுறைகள் வகுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்தும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை பாதுகாத்தல், பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான, அதனுடன் தொடர்புடைய நிர்வாகத்தினருக்கும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இந்தச் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, பிரதி அமைச்சர் ரோஹண குமார திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக