28 ஜூன், 2011

சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி




பயங்கரவாத நடவடிக்கைகளால் நன்மையடையும் சில குழுக்களிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வது இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் 50 ஆவது வருட நிறைவு விழாவையொட்டி கொழும்பில் நடைபெற்ற சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பலநாடுகள் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் அது ஒரு கடந்த கால நிகழ்வாகும். இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக