28 ஜூன், 2011

முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்




முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசத்தில் நேற்று 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் மேலும் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக