19 மே, 2011

நிரந்தரமாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் 117,888பேர்: ஐ.நா.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் 117,888 பேர் நிரந்தரமாக குடியேற்றப்படாமலுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சுமார் 300,000 பேர் செட்டிகுளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 4981 குடும்பங்களைச் சேர்ந்த 16401 பேர் செட்டிகுளம் முகாமில் தற்போது இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு முறையான குடியிருப்புகள் இல்லையெனவும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 18589 பேரும் மன்னாரைச் சேர்ந்த 4928 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 94371 பேரும் இன்னும் நிரந்தரமாக மீளக்குடியேற்றப்படாமல் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக