23 ஜனவரி, 2011

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்ககும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.

கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளைகள், கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட மற்றும் பேராயர் அருட்திரு தோமஸ் சௌவுந்தர நாயகம் அடிகளார் உட்பட அரச அதிகாரிகள் மக்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இராணுவத்தினர் இரவு பகல் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இதே போன்று பொலிசாரும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளார்கள் .

குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவாகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் பொது மக்கள் இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக அயலில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அன்ற இராணுவ முகாமிலோ தெரிவித்து நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக