23 ஜனவரி, 2011

திருகோணமலையில் நில வெடிப்பு:மக்கள் பதற்றம்


திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இன்று அதிகாலை நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் புதைகுழிகள் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலவெடிப்பு குச்சவெளி கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்குப் பின்னால் அமைந்துள்ள சுமார் 400 மீற்றர் பரப்பளவு கொண்ட களப்பு பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் இராணுவத்தினரால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பிரவேசிக்வும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் இப்பகுதியை ஆய்வுசெய்வதற்காக கொழுப்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக