10 செப்டம்பர், 2010

நவீன கையடக்க கைத்துப்பாக்கி பொலிஸாரால் கண்டுப் பிடிப்பு




இலங்கையில் இது வரை கண்டெடுக்கப்படாத மிகச் சிறிய, நவீனரக கையடக்க கைத்துப்பாக்கி ஒன்றை அளவத்துகொடை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் எல்.ரி.ரி.ஈ அமைப்போ அல்லது ஜே.வி.பி. குழுக்களோ பாவிக்காத சுமார் 3 முதல் 4 அங்குல நீளத்தையுடைய இக் கைத்துப்பாக்கி தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அளவத்து கொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அளவதுகொடைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அக்குறணை - துனுவில என்ற இடத்தில் ஒருவரைக் கைது செய்த போது அவர் இடைத் தரகராகத் தொழிற்பட்டு கலகெதரையைச் சேர்ந்த ஒருவருக்கு 29 0000 ரூபாவிற்கு அதை விற்பனை செய்யதுள்ளமை தெரிய வந்துள்ளது.

கம்பஹா, நிட்டம்புவ பகுதியிலுள்ள ஒரு நபர் பாதாளக் குழுத்தலைவர் ஒருவருக்கூடாக இவ்வியாபாரத்தை மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது பாதாளக் குழுக்களின் மறைமுகக் கொடுக்கல் வாங்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக் கின்றனர். மேலதிக விசாரனைகள் இடம் பெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக