3 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு




அரசியலமைப்பு திருத்தம் : ஐதேக உறுப்பினர்கள் இருவர் ஆதரவு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐதேகவின் பொலன்னறுவ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகரவும் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக