5 ஆகஸ்ட், 2010

மேல் நீதிமன்றத்துக்கு கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது: ரணில்

மேல் நீதிமன்றத்துக்கு பொன்சேகாவை கொண்டுவர முடியுமானால் கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை சட்ட விவாதத்தின் போதே ரணில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இங்கு டொடர்ந்து உரையாற்றிய இவர்,

பயங்கரவாதத்திற்கு ஆதராக செயற்பட்ட கே.பி எனும் குமரன் பத்மநாதன் இந்நாட்டில் படுகொலைகளுக்கும் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கும் பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஆனால் இவர் அரச கட்டுபாட்டில் உள்ளார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை மேல் நீதி மன்றத்துக்கு கொண்டுவர முடியுமாயின் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட கே.பி. யை ஏன் மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு வர முடியாது என கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக