10 ஜூன், 2010

குருநாகலில் விஷவிதை உண்ட 12 மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

குருநாகல் மாவட்டத்தில் ஒருவகை விஷ விதைகளை உண்ட 12 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

பிங்கிரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் இரு கட்டங்களில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அதிகரி உபாலி சிங்க தெரிவித்தார்.

இவர்களில் ஒரு மாணவியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்ற உபாதைகளால் இவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக