7 மார்ச், 2010

பெண்களை கெளரவமான முறையில் மதிக்கும் சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப முயற்சிப்போம்




மகளிர் தினச் செய்தியில் பிரதமர்

பெளத்த சிந்தனைகள் மூலம் வளர்க்கப்பட்ட, இலங்கை சமூகத்தின் தாய்மைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மகளிர் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டின் அபிவிருத்திக்கு குடும்ப அலகினுள் காணப்படு கின்றன ஒற்றுமையா னது பாரிய பக்கபலமாகும்.

அதனை விருத்தி செய்து கொள்வதற்காக பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை சிறந்த முறையில் பேணி வருவதற்கு தாயிடமிருந்து கிடைக்கப்பெறும் பங்களிப் பானது அளப்பரிய தாகும். இரக்கம், கருணை, முதி யோருக்கு பணிவிடை செய்தல் போன்ற மனி தாபிமான பண்புகளை குடும்ப அலகினுள் ஏற்படு த்துவதனை பயிற்றுவிப்ப தற்காக தாய்மார்கள் அமைதி யான முறையில் மேற்கொள்ளும்

முயற்சியினை முழு சமூகமும் பாராட்டுதல் வேண்டும். முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த பங்கரவாத செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டின் பெண்களே அதிகம் இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர்.

அவ்வாறே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமது பிள்ளைகளையும் கணவன்மார்களையும் இராணுவத்திற்கு அனுப்பியதும் எமது பெண் சமூகமாகும்.

தேசிய அபிலாஷையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெண்கள் சமூகம் செய்த அர்ப்பணிப்பு இல்லாத விடத்து ஒற்றையாட்சி கொண்ட அரசொன்று என்பது கனவாக மட்டுமே இருந்திருக்கும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரை பகுதிக்கும் மேலான பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அனைத்து விதத்திலும் பயன்மிக்க முறையில் உபயோகிக்கும் பட்சத்தில் இலங்கையின் எதிர்காலத்தை செழிப்புடையதாக மாற்றுவது அவ்வளவு கடினமான விடயமாக அமையாது.

தாய்மாருக்கு உயர்ந்த முறையில் கெளரவிக்கப் பழகியுள்ள இந்த சமூகத்தில் சில சந்தர்ப்பங்களில் கேள்விப் படக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கவலைக்கிடமான விடயமொன்றாகும். அவற்றினை எதிர்த்தல் வேண்டும்.

பெண்களை கெளரவமான முறையில் மதிக்கும் ஒரு சமூகத் தினை மீள்கட்டியெழுப் புவதற்காக நாம் இந்த சர்வதேச மகளிர் தினத் திலிருந்தாவது முயற்சித்தல் வேண் டும்.

சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டுகை அமைச் சின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிசெளபாக்கிய மிக்க தசாப்தத்தின் பெண்களின் பங்களிப்புபீ என்ற தொனிப்பொரு ளின் கீழ் நடைபெறும் தேசிய விழா வின் பணிகள் அனைத்து வழிகளி லும் வெற்றியளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக