16 பிப்ரவரி, 2010

நைட் விஷன், ரவைகள் அக்கராயன்குளத்திலிருந்து மீட்பு



வட பகுதியிலிருந்து இரவு பார்வை தொலைநோக்கி (நைட் விஷன் பைனாகுலர்) மற்றும் 1500 துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ள தாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அக்கராயன்குளம், ஆந்தன்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட பாரிய தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ. கே. மி 47 ரக மெகஸின், ரி-56 ரக மெகஸின், 3 மிதிவெடிகள், பல்வேறு வகையான பெருந்தொகை துப்பாக்கி ரவைகளையும் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்கட்டிச்சோலை பிரதே சத்திலிருந்து கைக்குண்டுகளையும் இராணு வத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்


கொழும்பில் முதலாவது ஹலால் மாநாடு

ஹலால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க திட்டம்



இலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் வரச் செய்வதற்கு இங்கு ஹலால் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமை ச்சரான பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.

ஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தன.

ஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியான, முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றி தழ் என்று ஜம்இய்யத்துல் உலமா பிர முகர்கள் இங்கு ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அறிக்கையில் தெரிவித்தனர்.

சைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழு ப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப் பட்டது. நான்காயிரத் துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றி தழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான் றிதழை வழங்கி வருகிறது.




நிலக்கண்ணி, மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு



இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய அரசு சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4+ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் அவுஸ்திரேலியா தூதுவர் திருமதி கெகீ கே. க்ளுக்மன் ணிசூ விஹஙீகுகூலீ றிலீட் றிஙீஞிகீசீஹஙூ கையளித்தார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட, அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




வேட்பு மனுக்களை ஏற்பதற்கான பணிகள் பூர்த்தி:
இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி 26வரை நீடிப்பு



பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (16) உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டதாக சுமணசிரி தெரிவித்தார். சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.

இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே (17) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் கூறியது.

இதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன. ஐ.ம.சு. முன்னணி 17 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டி யல்களை பூர்த்தி செய்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளதோடு, இந்த வார இறுதிக்குள் அந் தப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ள தாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ் வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற கட்சி களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட எதிர்க் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக அறிய வருகிறது. ஐ.தே. முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள தோடு, சரத் பொன்சேகா தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஜே.வி.பி. முயன்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட தயாராகி வருவதோடு, மனோகணேசன் தலைமையிலான கட்சியும் ரவூப்ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸரூம் தேர்தலில் இணைந்து, தனித்து போட்டி யிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி.க்கள் சிலருக்கு இம்முறை தேர்த லில் போட்டியிட அனுமதி கிடைக்காது எனவும், இவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட தயாராவதாகவும் அறிய வருகிறது.

இதேநேரம் ஐ.ம.சு. முன்னணி திங் கட்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதோடு, வேட்பு மனுத்தாக்கல் 26 ஆம் திகதி நண்பகலுடன நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக