28 ஜனவரி, 2010

சக்திமிக்க நாடாக இலங்கையை கட்டியெழுப்ப கிடைத்த வெற்றி

அமைச்சர் மைத்திரிபால



சக்திமிக்க நாடாக இலங்கை யைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் பெற்றுக் கொடுத்துள்ள மாபெரும் வெற்றியதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈட்டியுள்ள வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சிறிசேன; சரத் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்றே அமைந்திருக்கும்.

அதனை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தடுத்துள்ளார் கள். இந்த வெற்றியானது ஜன நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்பதுடன் ஜனாதிபதிக்கு மட்டு மன்றி நாட்டுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறுவதே பொருத்தமாகும்.

நாட்டு மக்கள் நன்றி மறவாத வர்கள். தாய் நாட்டைப் பயங்கர வாதத்திலிருந்து பாதுகாத்து சகலரு க்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மைக் காக நாட் டுத் தலைவனான ஜனாதிபதிக்கு நன்றிக் கடனாக இம்மாபெரும் வெற்றி யைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக