24 ஜனவரி, 2010

நம்பகமான வேட்பாளருக்கு மக்களின் ஆதரவு

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்துக் கடந்த காலங்களில் பல கட் டுரைகள் பிதினகரனில்பீ வெளியாகின. நிறைவேற்று ஜனா திபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முழு நாடும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கருதப்படுவதால் சிறுபான்மை யினரின் வாக்குகள் தீர்மான சக்தியாக அமைகின்றன என் றும் அது சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை வென்றெ டுப்பதற்கு வாய்ப்பானதாக இருக்கும் என்றும் அக்கட்டுரை களில் சுட்டிக்காட்டப்பட்டது. இது முற்றிலும் சரியான கரு த்து.

நாளை மறுதினம் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வுள்ளனர். சிறுபான்மையினங்களைச் சேர்ந்தவர்களும் தங் கள் வாக்குகளை அளிப்பார்கள். மேலே குறிப்பிட்ட கட்டு ரைகளில் கூறியது போல, சிறுபான்மையினர் ஜனாதிபதித் தேர்தலைத் தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண் டும்.

சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் உடனடிப் பிரச்சினைகளு க்கான தீர்வைத் தள்ளிப்போட முடியாது. அவை தாமத மின்றித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். பாரம்பரிய வாழ்புலத்திலிருந்து வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டுப் பல வருடங்களாகிவிட்டன. இவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் வாழ்கின்றார்கள்.

புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நட வடிக்கையின் விளைவாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடி யேற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அதேபோல வட க்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறி யவர்களின் மீள்குடியேற்றமும் இன்னும் முழுமை பெறவி ல்லை.

இவைபோன்ற உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதி அளிக்கலாம். வாக்குறு திகளை அப்படியே நம்புவதில் அர்த்தமில்லை. கடந்த கால ங்களில் எத்தனையோ பேர் எத்தனையோ வாக்குறுதிகளை அளித்தார்கள். மக்களும் நம்பினார்கள். ஆனால் பெரும்பா லானோர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவி ல்லை. எனவே வாக்குறுதி அளிக்கின்றார் என்பதற்காக ஒரு வர் மீது நம்பிக்கை வைப்பதிலும் பார்க்க அளிக்கும் வாக்கு றுதியை நிறைவேற்றக் கூடியவர் யார் என்பதை ஆராய்ந்து நம்பிக்கை வைப்பதே சரியானது. ஒவ்வொருவரினதும் கட ந்த கால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வரலாம்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுற்றதைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு நன்மை பயக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்னியில் இட ம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலும் மீள்குடியேற் றம் ஆரம்பமாகிவிட்டது. கொழும்புக்கும் வடக்குக்கும் இடை யிலான ஏ 9 பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் சமூக, பொருளாதார புத்தெழுச்சியொன்றை அவதானிக்க முடிகின்றது. தடுப்புக் காவ லிலிருந்த தமிழ் இளைஞர்கள் கட்டங்கட்டமாக விடுவிக்கப் படுகின்றனர்.

இவற்றையெல்லாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அர சாங்கமே செய்ததென்பதால் இந்த அரசாங்கத்தின் வேட்பா ளர் அளிக்கும் வாக்குறுதிகளில் சிறுபான்மையின மக்கள் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக