26 டிசம்பர், 2009


ராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து: எம்.பி., தகவல்






இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டம் உள்ளது,'' என, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.திருவண்ணாமலையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.பேரணிக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


மத்திய அரசு இலங்கை தமிழர்களின் முழு வாழ்வாதாரத்துக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அங்கு தேர்தல் நடக்க உள்ளதால் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அது பிப்ரவரி மாதம் துவங்கப்படும். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.


வரும் 2010 ஆகஸ்டு 31ம் தேதிக்குள் இலங்கை முகாமில் உள்ள தமிழர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு அங்குள்ள முகாம்கள் மூடப்படும்.இலங்கை தமிழர் பகுதிகளில் விவசாயத்தை பெருக்க விதை, மருந்து, விவசாய கருவிகள் வழங்கப்படும். யாழ்ப்பாணம் மாணவர்கள் கல்வி திட்டங்களை மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர்.


இதற்காக இந்திராகாந்தி பல்கலைக்கழகம் நிறுவ திட்டம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது காங்கிரஸ் மனித உரிமையியல் துறை மாவட்ட செயலாளர் தேவேந்திரன், துணை தலைவர் சின்னதுரை, நகர செயலாளர் புரு�ஷாத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக