26 நவம்பர், 2009

யாழ். இணுவிலில் இளம் குடும்பஸ்தர் சந்தேகத்தில் கைது


இணுவில் பகுதியில் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரை பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு இவருடைய வீட்டில் வைத்து, கொழும்பில் இருந்து வந்திருந்த இரகசியப் பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக இவர் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த காலத்தில், யாழ்ப்பாணம் இணுவிலில் இடம்பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக