14 அக்டோபர், 2009

இந்திய தூதுக் குழு- எதிர்க் கட்சி இன்று சந்திப்பு



இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல , இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் நிலவரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் விளக்கிக் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம்சிங்க தெரிவித்தார். அத்துடன் வவுனியாவில் இடம்பெயர்ந்த்வர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிற்கு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக மனோகணேசன் எம்.பி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக