7 டிசம்பர், 2009

அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு 3 பொலிஸ் குழுக்கள்


தேசியக் கட்சியின் மாநாட்டின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாககப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு வெலிசறை - நவலோக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக