20 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவும் ராஜினாமா




முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தாம் வகித்து வந்த பதவியை அனோமா பொன்சேகா ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற படைவீரர்களது குழந்தைகள் பராமரிப்பு நிதியத்தில் அனோமா வகித்து வந்த பதவி நீக்கப்பட்டதன் காரணமாகவே, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக