14 நவம்பர், 2009

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பம்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக முகாம்களில் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள 16ஆயிரத்து 394பேரைக் குடியமர்த்துவதற்கான நடவடி;ககை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதற்கேற்ப நிவாரணக் கிராமங்களிலுள்ள 4415குடும்பங்கள் துணுக்காய் பிரதேசத்தின் 20கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதற்கிடையில் இதுவரையில் 1575குடும்பங்களைச் சேர்ந்த 5220பேர் துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் அவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக இரு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக ஐந்து உழவு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக