11 நவம்பர், 2009

எதிர்க்கட்சிப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே : ஐ.தே.க.தெரிவிப்பு


பொது வேட்பாளர் மிகவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துவதாகவும் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது எதிர்க்கட்சி வேட்பாளர்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தெரிவு செய்யுமளவுக்கு புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இவ்வாறு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தித் தேர்தலில் இவர் போட்டியிடலாம், இவரால் போட்டியிட முடியாது என்றெல்லாம் கருத்து தெரிவிப்பது, ஜனநாயகம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள தெளிவினைப் பறைசாற்றுவதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எந்தத் தேர்தலை நடத்தினாலும் தாம் வெற்றி பெறுவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், எவ்வாறான குளறுபடிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டாலும் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக